இந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மிகப் பழங்காலந்தொட்டே வணிகத் தொடர்பு இருந்தது. இந்தியப் பொருட்களான பட்டு, கைத்தறி, நறுமணப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று வழித்தடங்களில் ஏற்றுமதியாயின.
இதில் இரு வழித்தடங்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் அராபியர் படையெடுப்பின் விளைவாக தடைபட்டன.
கி.பி.1453 ஆம் ஆண்டு ஆட்டோமானிய துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தைக் கைப்பற்றியதால் மூன்றாவது வழித்தடமும் தடைபட்டது.
எனவே, இந்தியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்ட ஐரோப்பியர்கள், இந்தியாவுக்கு கடல்வழி காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
போர்த்துக்கீசியர்கள்:-
கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர்கள் போர்த்துக்கீசியர்கள். போர்த்துக்கீசிய இளவரசர் ஹென்றி கடல் பயணத்தில் ஆர்வம் கொண்டு மாலுமிகளுக்கு பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்கினார். எனவே இவர் “மாலுமி ஹென்றி” எனப் போற்றப்பட்டார்.
இதில் இரு வழித்தடங்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் அராபியர் படையெடுப்பின் விளைவாக தடைபட்டன.
கி.பி.1453 ஆம் ஆண்டு ஆட்டோமானிய துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தைக் கைப்பற்றியதால் மூன்றாவது வழித்தடமும் தடைபட்டது.
எனவே, இந்தியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்ட ஐரோப்பியர்கள், இந்தியாவுக்கு கடல்வழி காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
போர்த்துக்கீசியர்கள்:-
கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர்கள் போர்த்துக்கீசியர்கள். போர்த்துக்கீசிய இளவரசர் ஹென்றி கடல் பயணத்தில் ஆர்வம் கொண்டு மாலுமிகளுக்கு பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்கினார். எனவே இவர் “மாலுமி ஹென்றி” எனப் போற்றப்பட்டார்.