# இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை

இந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மிகப் பழங்காலந்தொட்டே வணிகத் தொடர்பு இருந்தது. இந்தியப் பொருட்களான பட்டு, கைத்தறி, நறுமணப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று வழித்தடங்களில் ஏற்றுமதியாயின.

இதில் இரு வழித்தடங்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் அராபியர் படையெடுப்பின் விளைவாக தடைபட்டன.

கி.பி.1453 ஆம் ஆண்டு ஆட்டோமானிய துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தைக் கைப்பற்றியதால் மூன்றாவது வழித்தடமும் தடைபட்டது.

எனவே, இந்தியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்ட ஐரோப்பியர்கள், இந்தியாவுக்கு கடல்வழி காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போர்த்துக்கீசியர்கள்:-

கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர்கள் போர்த்துக்கீசியர்கள். போர்த்துக்கீசிய இளவரசர் ஹென்றி கடல் பயணத்தில் ஆர்வம் கொண்டு மாலுமிகளுக்கு பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்கினார். எனவே இவர் “மாலுமி ஹென்றி” எனப் போற்றப்பட்டார்.

# Group 4 & VAO Science Study Material in tamil

ஹார்மோன்கள்:
    வேதியியல் அடிப்படையில் ஹார்மோன்கள் புரதங்களாகவோ அல்லது ஸ்டீராடீய்களாகவோ உள்ளன. ஹார்மோன்கள் மிகக்குறைந்த அளவே சுரந்தாலும் செயல் திறனுள்ளவையாக உள்ளன.

பிட்யூட்டரி சுரப்பி:
    பட்டாணி அளவே உள்ள பிட்யூட்டரி சுரப்பி மூளையின் ஹைப்போதலாமஸோடு இணைந்துள்ளது. நாளமில்லாச் சுரப்பிகளைப் பிட்யூட்டரி சுரப்பி ஒழுங்குபடுத்துவதால், நாளமில்லாக் குழுவின் நடத்துநர் என இதை அழைக்கலாம்.

# சாலை இளந்திரையன் சிறப்புப் பெயர்களும் படைப்புகளும்


சிறப்புப் பெயர்கள்:

எழுச்சிச் சான்றோர்
திருப்புமுனை சிந்தனையாளர்
மற்றப் பெயர்கள்:
பிள்ளைப்பாண்டியன்
காஞ்சித்தலைவன்
களக்காடு சா.பெரியபெருமாள்
வீதியூர் நீக்கிழார்

சிவில் சர்வீசஸ் தேர்வு - மெய்ப்படும் பெருங்கனவு! - பாகம் 1 (தொடர்ச்சி)



முதன்மைத்தேர்வு (Main Examination)

சிவில் சர்வீசஸ் தேர்வின் மிகமுக்கியமான கட்டம் முதன்மைத்தேர்வு. இதில் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் இறுதி வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கும். இந்தத் தேர்வு எழுத்துத்தேர்வு ( descriptive type questions).
இந்த முதன்மைத் தேர்வில் தமிழ்வழி மாணவர்கள் நிச்சயம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பிறமாணவர்களை பின்னுக்குத் தள்ளிவிடலாம்! எப்படி?

அதுதான் தாய்மொழிவழிக் கல்வியின் பலம்! இந்தத் தேர்வில் பாடங்களை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறோம் என்பதைப் பொருத்து மதிப்பெண்கள் கிடைக்கும். வினாக்கள் நம் அறிவையும் நுணுகி ஆராயும் திறனையும் சோதிப்பதாக அமையும். அதைச் சரியாக விடைகளில் வெளிப்படுதிவிட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். தாய்மொழி வழிக்கல்வியில் படிப்பவர்களால் நிச்சயம் நன்முறையில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத் முடியும். முதன்மைத் தேர்விலும் வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்தான் இருக்கும். தமிழ்வழியில் தேர்வு எழுதுபவர்கள் வினாக்களை நன்கு புரிந்துகொண்டு விடையளிக்கவேண்டும். வினாக்களைப் புரிந்துகொண்டால் பாதிவிடைகளை உருவாக்கிவிடலாம்!

கலித்தொகை

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும்.
பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன.
 
அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். 

சேலம் ஆவின் பால் அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு

சேலம் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள அலுவலக ஊழியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 24.6.2016-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.