# TNPSC TAMIL STUDY MATERIALS - உடுமலை நாராயணக்கவி

உடுமலை நாராயணக்கவி
  • இயற்பெயர் : நாராயணசாமி
  • பெற்றோர் : கிருஷ்ணசாமி-முத்தம்மாள்
  • பிறந்த ஊர் : உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
  • காலம் : 25.9.1899 - 23.5.1981
  • சிறப்புப் பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்
  • புலவர் பாலசுந்தரம்பிள்ளை இவருக்கு ஆசிரியராக இருந்தார். முத்துசாமிக் கவிராயரிடம் சுமார் 15 அண்டுகள் தமிழ்க் கல்வியைக் கற்றார். தவத்திரு சங்கரதாசு சுவாமிகளிடம் நாடகத்தையும், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் கதை இசைக் கலையையும் கற்றுக் கொண்டார்.
  • கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.
  • கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் திரை உலகிற்கு வந்தவர்
  • நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்
  • சீர்திருத்த கருத்துகளை முதன் முதலாகத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர்
  • திருக்குறள் கருத்துகளை மிகுதியாகப் பயன்படுத்தியவர்
  • திரைப்படப் பாடல்களை வருணனையை விட்டுக் கருத்தை நோக்கி நகர்த்தியவர்
  • உடுமலையாரைப் போலப் புலமைப்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் எவருமில்லை. உடுமலையாரின் திரைப்பட பாடல்கள் குறித்து “நாம் எழுதும் பக்கம் பக்கமான வசனங்களுக்குப் பத்து வார்த்தைகளில் பாடல்களின் மூலம் கருத்தினை விளக்கிடுவார்’’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் புகழ்ந்துரைத்தார்.
  • நகைச்சுவை மன்னன் கலைவாணரின் கணிப்பில் இவர் ஒரு திரையுலக பாரதி, பாட்டுகளின் வயிற்றில் பகுத்தறிவு பால் வார்த்தவர். திரைப் பாடல்களுக்கு இலக்கிய மதிப்புக் கொடுத்தவர்.
  • பாடல்கள்
  • “போகாதே போகாதே என்கணவா
  • பொல்லாத சொப்பனம் நானுங் கண்டேன்’’
  • “பெண்களை நம்பாதே கண்களே
  • பெண்களை நம்பாதே’’
  • “இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே இங்கிலீசு படித்தாலும் இந்தத் தமிழ்நாட்டிலே’’
  • “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’’
  • “குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது’
  • “பட்டணந்தான் போகலாமடி - பொம்பளே பணங்காசு தேடலாமடி’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற