- தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் PDF
- அம்பை என்கிற சி.எஸ்.லக்ஷ்மி
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- நாமக்கல் கவிஞர்
- தேவநேயப்பாவாணர்
- ஞானக்கூத்தன் | கல்யாண்ஜி - வண்ணதாசன்
உடுமலை நாராயணக்கவி
- இயற்பெயர் : நாராயணசாமி
- பெற்றோர் : கிருஷ்ணசாமி-முத்தம்மாள்
- பிறந்த ஊர் : உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
- காலம் : 25.9.1899 - 23.5.1981
- சிறப்புப் பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்
- புலவர் பாலசுந்தரம்பிள்ளை இவருக்கு ஆசிரியராக இருந்தார். முத்துசாமிக் கவிராயரிடம் சுமார் 15 அண்டுகள் தமிழ்க் கல்வியைக் கற்றார். தவத்திரு சங்கரதாசு சுவாமிகளிடம் நாடகத்தையும், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் கதை இசைக் கலையையும் கற்றுக் கொண்டார்.
- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.
- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் திரை உலகிற்கு வந்தவர்
- நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்
- சீர்திருத்த கருத்துகளை முதன் முதலாகத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர்
- திருக்குறள் கருத்துகளை மிகுதியாகப் பயன்படுத்தியவர்
- திரைப்படப் பாடல்களை வருணனையை விட்டுக் கருத்தை நோக்கி நகர்த்தியவர்
- உடுமலையாரைப் போலப் புலமைப்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் எவருமில்லை. உடுமலையாரின் திரைப்பட பாடல்கள் குறித்து “நாம் எழுதும் பக்கம் பக்கமான வசனங்களுக்குப் பத்து வார்த்தைகளில் பாடல்களின் மூலம் கருத்தினை விளக்கிடுவார்’’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் புகழ்ந்துரைத்தார்.
- நகைச்சுவை மன்னன் கலைவாணரின் கணிப்பில் இவர் ஒரு திரையுலக பாரதி, பாட்டுகளின் வயிற்றில் பகுத்தறிவு பால் வார்த்தவர். திரைப் பாடல்களுக்கு இலக்கிய மதிப்புக் கொடுத்தவர்.
- பாடல்கள்
- “போகாதே போகாதே என்கணவா
- பொல்லாத சொப்பனம் நானுங் கண்டேன்’’
- “பெண்களை நம்பாதே கண்களே
- பெண்களை நம்பாதே’’
- “இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே இங்கிலீசு படித்தாலும் இந்தத் தமிழ்நாட்டிலே’’
- “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’’
- “குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது’
- “பட்டணந்தான் போகலாமடி - பொம்பளே பணங்காசு தேடலாமடி’’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக