பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
* பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ரூபாய் 2 இலட்சம் மதிப்புடைய காப்பீடுத் திட்டமாகும்.
* வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 18-50 வயதுடைய அனைவரும் வருடத்திற்கு ரூபாய் 330 -ஐ மட்டும் பிரிமியம் செலுத்தி இக்காப்பீடு திட்டத்தில் இணையலாம்.
* இந்த பிரிமியம் செலுத்துவோருக்கு மரணத்துக்குப்பின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் ஆயுள் காப்பீடு தொகை கிடைக்கும். இவற்றுக்கான பிரிமியம் மற்றும் ஒய்வூதிய மாதாந்திர தொகை ஆகியவை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படும்.
* வங்கியின் விருப்பத்தை பொறுத்து எல்ஐசி மூலமாகவோ அல்லது மற்ற காப்பீடு நிறுவனங்களின் வழியாகவோ இந்த திட்டம் வழக்கப்படும்.
அடல் பென்சன் யோஜனா
* 18-40 வயது வரை உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் அடல் பென்சன் யோஜனா திட்டதில் சேரலாம்.
* குறைந்தபட்ச வைப்பு பென்சன் தொகை மத்திய அரசால் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.
* ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை இந்த தொகையை செலுத்தி வந்தால், அவர்கள் 60 வயதில் இருந்து மாதந்தோறும் ரூ. 1000 முதல் 5000 வரை பென்சன் பெறலாம்.
* வங்கி கணக்கு வைத்திருக்கும் வயது தகுதி உடைய அனைவரும் சுரக்ஷா பீமா யோஜனா, ஜோதி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா ஆகிய மூன்று திட்டங்களிலும் சேரலாம். இதற்கான விவரங்களை கணக்கு வைத்திருக்கும் வங்கிகளை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக