பகுபத உறுப்பிலக்கணம் படித்திருப்போம். இன்றும் படித்தவற்றை மறக்காமல் இருந்தால் இன்னும் இது எளிமையாக இருக்கும். அப்படி மறந்திருந்தாலும் கவலை இல்லை. வேர்ச்சொல்லை மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
வேர்ச்சொல்:
ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே. அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்.
(எ.கா) பார்
வேர்ச்சொல்:
ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே. அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்.
(எ.கா) பார்
'பார்' என்பது ஒரு வேர்ச்சொல். இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.
அப்படியானால் 'வந்தான்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிய முடிகிறதா?
'வந்தான்' என்பதன் வேர்ச்சொல் 'வா'.
அவ்வளவுதான். வார்த்தையைப் பார்த்தவுடனே எளிதாக வேர்ச்சொல்லைக் கண்டறியலாம்.
இதைப்போலவே ஏதோவொரு வார்த்தையைக் கொடுத்து அதன் வேர்ச்சொல்லைக் கண்டுபிடி என கேள்விகள் கேட்கப்படும்.
மாதிரி வினாக்கள்:
1) 'சென்றான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:
அ)சென்ற ஆ) சென்று இ) செல் ஈ) சென்றனன்
2) பேசினான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:
அ) பேசி ஆ) பேசு இ) பேசிய ஈ) பேசுதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக