# இடைக்கால பக்தி இயக்கம் Part-I



இராமானுஜர்:
  • தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்பெரும்புதூரில் தோன்றியவர்.
  • வைணவ சமயப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.
  • இவரது கோட்பாடு விசிட்டாத்வைதமாகும்.
  • சரணாகதி நெறியை வலியுறுத்தி சாதி வேறுபாடின்றி அனைவரையும் முக்தி அடையத் தகுதி உடையவர் என்றார்.

மத்துவர்:
  • தென் கன்னடத்தில் உடுப்பிக்கு அருகே சிறு கிராமத்தில் தோன்றினார். 
  • இவரது இயற்பெயர் வாசுதேவன்.
  • அச்சுதப் பிரகாசரிடம் தீட்சைப் பெற்று பூரண பிரக்ஞர். 
  • ஆனந்த தீர்த்தர் எனவும்  போற்றப்பட்டார்.
  • இவரது தத்துவம் துவைதம் என்பதாகும்.
இராமாநந்தர்:
  • இவரது முயற்சியால் வைணவம் வடக்கே பரவியது.
  • இராமர் கீதை வழிபாட்டை பரப்பினார்.
  • சாதிப் பாகுபாட்டினை அறவே வெறுத்தார்.
  • இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கூறினார்.
  • சமயக் கருத்துக்களை முதன் முதலில் ந்தி மொழியில் பரப்பியவரும் இவரே ஆவார்.

நிம்பர்க்கர்:
  • இவர் தென்னிந்தியாவில் கோதாவரி நதிக்கரையில் சிறு கிராமத்தில் பிறந்தார்.
  • வடஇந்தியாவில் மதுராவிற்கருகேயுள்ள பிரஜா என்ற இடத்தில் வாழ்ந்தார்.
  • இவரது பக்தி நெறியைச் சேர்ந்தோர் இராதாகிருஷ்ண வழிப்பாட்டில் நம்பிக்கைக்  கொண்டிருந்தனர்.
  • இவரும் ‘சரணாகதி’ நெறியை வலியுறுத்தினார்.
  • இவரது கொள்கை பேதாபேதம் என்று அழைக்கப்படுகிறது.

கபீர்:
  • காசிக்கு அருகே லகர்டேலோ என்ற ஏரியில் தாமரை மலரிலிருந்த குழந்தையை முஸ்லீம் நெசவாளரால் வளர்க்கப்பட்டவர்.
  • இராமானந்தரால் சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
  • இந்து முஸ்லீம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டார்.
  • கடவுளிடம் அன்பு செலுத்துவதே நற்கதி அடைய வழி என்றார்.
  • உண்மையே இயல்பானது. அது இல்லோர் இதயத்திலும் உறைகின்றது. அவ்வுண்மை  அன்பினால் வெளிப்படுகிறது என்ற கருத்தை உடையவர்.
  • பக்தியை வலியுறுத்தாத சமயம் சமயமன்று என்றார்.

  • நாம தேவர்:
    • மஹாராஷ்டிரா மாநிலத்தில் பண்டரிபுரம் என்னுமிடத்தைச் சார்ந்தவர்.
    • உண்மையான பக்தியும் கடவுள் வழிபாடுமே இவரது முக்கிய கொள்கையாகும்.

    குருநானக்:

    • சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த இவர் பஞ்சாப் மாநிலத்தில் தால்வந்தி என்ற கிராமத்தில் பிறந்தார்.
    • இவரது இனிய பாடல்கள் ஆதிகிரந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
    • இந்து - முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க முயன்றார்.
    • சீக்கிய சமயம் இவரால் உருவாக்கப்பட்டது.

    வல்லபாச்சாரியர்:

    • இவர் காசியில் பிறந்தார்.
    • தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். 
    • இவரது கோட்பாடு சுத்த அத்வைதக் கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர்.
    • வடமொழியிலும், பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார்.
    • கிருஷ்ணனே உயர்ந்த பிரம்மம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற