அகரம் + ஆதி = அகராதி
ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.
அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.
நிகண்டுகள்:
தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.
நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.
அகரமுதலி:
திருமூலரின் திருமந்திரத்தில் "அகராதி" என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.
அகராதி நிகண்டு:
நிகண்டுகளில் ஒன்றான "அகராதி நிகண்டில்" அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.
இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.
ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.
அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.
நிகண்டுகள்:
தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.
நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.
அகரமுதலி:
திருமூலரின் திருமந்திரத்தில் "அகராதி" என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.
அகராதி நிகண்டு:
நிகண்டுகளில் ஒன்றான "அகராதி நிகண்டில்" அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.
இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.
சதுரகராதி:
வீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
இது கி.பி.1732 ஆம் ஆண்டு வெளிவந்தது.
சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.
பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியான பொருள் விளக்கம் இருந்தது.
வீரமாமுனிவர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய-தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.
சங்க அகராதி:
"தமிழ்-தமிழ் அகராதி" ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
இதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.
பிற அகரமுதலிகள்:
குப்புசாமி என்பவர் "தமிழ்ப் பேரகராதி" வெளியிட்டார்.
இராமநாதன் எனபவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார்.
இந்நூல் "இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி" எனும் பெயருடன் வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக