இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 22-வது ஆசிய தடகள சாம்பியன் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கம் வென்று உலக போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
முன்னதாக இந்தியா மகளிருக்கான குண்டு எறிதலில் முதலாவது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. பஞ்சாப்பை சேர்ந்த மன்ப்ரீத் கௌர் 18.28 மீட்டர் தூரம் குண்டை வீசி மற்ற வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி பதக்க மேடையை அலங்கரித்தார்.
நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனா வெள்ளிப் பதக்கத்தையும், நைனா ஜேம்ஸ் வெண்கல பதக்கத்தயைும் வென்றனர். மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த சஞ்சு யாதவ் 3-ம் இடத்தை பிடித்து மகிழ்ச்சியடைந்தார். ஆடவருக்கான குண்டு எறிதலில் நடப்பு சாம்பியன் விகாஸ் கும்ரா, வெண்கல பதக்கம் வென்றார். இந்தியா முதல் நாளில் 2 தங்கம், ஒரு வெள்ளி உள்பட 7 பதக்கங்களை கைப்பற்றியது.
பெண்களுக்கான உலக பாடி பில்டர் பட்டத்தை வென்ற இந்தியாவின் பூமிகா ஷர்மா!
2017 Current affairs in tamil
Current affairs Free Online Test
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக