

1. ஹைடாஸ்பஸ் (ஜீலம்) போர் கி.மு.326
கிரேக்க மன்னன்
அலெக்சாண்டருக்கும் இந்திய மன்னர் போரஸ் என்கிற புருஷோத்த மனுக்கும் இடையே
ஜீலம் நதிக்கரையில் கி.மு.326ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர்
வெற்றி பெற்றார்.
2. செலியூகசுக்கு எதிராக போர்
செலியூகஸ் நிகேட்டருக்கும், சந்திரகுப்த மௌரியருக்கும் இடையே நடைபெற்றது.
சந்திரகுப்த மௌரியர் வெற்றி பெற்றார்.
3. கலிங்கப்போர் கி.மு.261
அசோகர் கலிங்க நாட்டின்மீது கி.மு.261-ஆம் ஆண்டு படையெடுத்தார்.
இதனால் கலிங்கப்போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக் கானவர்கள்
கொல்லப்பட்டனர். இந்த கோரக் காட்சியை கண்டு மனம் வருந்திய அசோகர் இனி போர்
செய்வதில்லை என சூளுரைத்தார்.
4. முதல் அரேபியர் படையெடுப்பு
கி.பி.711-713
முகம்மது பின் காசிம், படையெடுத்து சிந்து,
மூல்டான் பகுதிகளைக் கைப்பற்றினார்.
5. தானேசர் போர் கி.பி. 1014
முகமது கஜினி தானேசர் மன்னர் அனந்த பாலை தோற்கடித்தார். பல கோயில்களை
அழித்ததுடன், நூற்றுக்கணக்கான மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றார்.
6. மூல்டான் மீது படையெடுப்பு கி.பி.1175
முகமது கோரி
மூல்டான்மீது படையெடுத்து மூல்டான் கோட்டையை கைப்பற்றினார்.
7.
முதலாவது தரேயின் போர் கி.பி.1191
அஜ்மீர் மன்னராகிய பிரித்விராஜ்
சௌஹா னுக்கும் முகமது கோரிக்கும் இடையே முதலாவது தரேயின் போர்
கி.பி.1191ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரித்விராஜ் சௌஹான் முகமது கோரியை
தோற்கடித்தார்.
8. இரண்டாம் தரேயின் போர் கி.பி.1192
முகமது கோரி பிரித்விராஜ் சௌஹானைத் தோற்கடித்தார். டெல்லி, கனோஜ் நகரங்களை
கைப்பற்றினார்.
9. செங்கிஸ்கான் படையெடுப்பு
செங்கிஸ்கான் என்ற மங்கோலியர் படையெடுத்தார்.
10. தைமூர்
படையெடுப்பு
தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்து டெல்லியை
சூறையாடினார்.
11. முதலாம் பானிபட் போர் கி.பி.1526
பாபருக்கும், இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்ற இப்போரில், லோடி
தோற்கடிக்கப்பட்டு முகலாய அரசு நிறுவப்பட்டது.
12. கன்வா போர்
கி.பி.1527
பாபர் மேவார் மன்னர் ராணா சாங்காவைத் தோற்கடித்தார்.
13. இரண்டாம் பானிபட் போர் கி.பி.1556
அக்பர் ஹெமு என்ற
இந்து மன்னரை தோற்கடித்தார். இதன் மூலம் மொகலாயர் ஆட்சி மீண்டும்
நிறுவப்பட்டது.
14. தலைக்கோட்டை போர் கி.பி.1565
விஜயநகர
மன்னராகிய ராமராயருக்கும் தக்காண சுல்தானுக்கும் இடையே தலைக்கோட்டை போர்
நடைபெற்றது. விஜயநகரப் படை தோல்வியுற்றது.
15. ஹல்திகாட் போர்
கி.பி.1576
மேவார் மன்னராகிய ராணா பிரதாப்பை மான்சிஸ், ஆசிப்கான்
ஆகியவர்களின் தலை மையிலான முகலாயர் படை தோற்கடித்தது.
16.
நாதிர்ஷாவின் படையெடுப்பு கி.பி.1739
ஈரான் மன்னர் நாதிர்ஷா
இந்தியாவின் மீது படையெடுத்தார். இதில் முகலாய மன்னர் முகமத் ஷாவின் படைகளை
தோற்கடித்தார். டெல்லி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
17.
முதல் கர்நாடகப் போர் கி.பி.1746-1748
முதல் கர்நாடகப் போர்
ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. இதில்
பிரெஞ்சு படைகள் தோற்கடிக்கப்பட்டு சென்னை ஆங்கிலேயர் வசம் வந்தது.
18. இரண்டாம் கர்நாடகப் போர் கி.பி.1749-54
ஆங்கிலேயருக்கும்
பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. பிரெஞ்சு செல்வாக்கு குறைந்
தது. முகமது அலி கர்நாடக நவாப் ஆனார்.
19. மூன்றாம் கர்நாடகப்
போர் கி.பி.1756-63
வந்தவாசியில் பிரெஞ்சுப்படைகள் தோற்கடிக்
கப்பட்டன.
20. பிளாசிப் போர் கி.பி. 1757
ராபர்ட்
கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படைக்கும், வங்காள நவாப் சிராஜூத் தௌலா
வுக்கும் நடைபெற்றது. இதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். வங்காளத்தில்
பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது.
21. வந்தவாசி போர் கி.பி.1760
பிரெஞ்சு கம்பெனியின் கவர்னராகிய தௌண்ட் வாலியை
பிரிட்டிஷ் படைகளின் தளபதியான சர் அயர்கூட் வந்தவாசி என்ற இடத்தில்
தோற்கடித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக