# Tamil ilakkanam | இடுகுறிப்பெயர், காரணப்பெயர்

இடுகுறிப்பெயர் :
  • நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே இடுகுறிப்பெயர்.  காரணம் அறியவியலாப் பெயர்கள் எல்லாம் இடுகுறிப்பெயர்களே.
  • மண், நாய், கோழி, மலை, காடு, மாடு  என்பன இடுகுறிப்பெயர்களே.

இடுகுறிப் பொதுப்பெயர் :
  • மலை என்பது அனைத்து மலைகளுக்கும் பொதுப்பெயர்.
  • காடு என்பது அனைத்துவகைக் காடுகளுக்கும் பொதுப்பெயர்.
  • மாடு என்பது பல்வகை மாடுகளுக்கும் பொதுப்பெயர்.
  • இவ்வாறு அனைத்துக்கும் பொதுவாக வரும் இடுகுறிப்பெயர்களை இடுகுறிப் பொதுப்பெயர் எனக் கூறுவர்.

இடுகுறிச் சிறப்புப்பெயர் :
  • ‘மரம்’ என்னும் சொல் மா, பலா, வாழை, தென்னை முதலான மரவகை அனைத்திற்கும் இடுகுறிப்பெயராய்ப் பொதுவாக வரும். 
  • ‘தென்னை’ என்னும் சொல் ஒரு காரணமும் இன்றி, இடுகுறிப்பெயராய் நின்று, ஒரு பொருளுக்கே (தென்னைமரம்) சிறப்பாய் வருவதனால் இடுகுறிச் சிறப்புப் பெயராயிற்று.
காரணப்பெயர்:
  • காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் காரணப்பெயர்கள் எனப்படும்.
  • தமிழில் காரணப்பெயர்களே மிகுதியாக உள்ளன. பிறமொழிகளில் இடுகுறிப்பெயர்களே மிகுதியாக உள்ளன.
  • பறவை (பறப்பதனால்), வளையல் , செங்கல் , முக்காலி, கரும்பலகை எனப் பலவற்றைக் கூறலாம்.
காரணப் பொதுப்பெயர் : 
  • ‘பறவை’ என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம். பறப்பதனால் பறவை எனக் காரணம் கருதி வழங்கும் பெயராயிற்று.
  • காகம், குயில், புறா, கிளி ஆகிய அனைத்தையும் ‘பறவை’ என்னும் பொதுச்சொல்லால் அழைக்கிறோம். அதனால், இதனைக் காரணப் பொதுப்பெயர் என்கிறோம்.
காரணச் சிறப்புப் பெயர் :

  • வளையல் என்னும் சொல் காரணச் சிறப்புப் பெயராகும்.
  • வளையல் போலவே சிலபொருள் வளைந்து வட்டமாக இருக்கும். இருப்பினும்,  அவையெல்லாம் வளையல் என அழைக்கப்படுவது இல்லை. இருப்பினும் இச்சொல், கையில் அணியும் வளையலை மட்டுமே குறிப்பதனால், காரணச் சிறப்புப் பெயர் ஆயிற்று.

    Click and download pdf file

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற